| தமிழகத்தில், கடந்த ஐந்தாண்டுகளில், மதுபானம் மூலம், அரசு வருவாய், இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. கடந்தாண்டில் மட்டும், 21,680 கோடி ரூபாய், அரசுக்கு வருமானம் கிடைத்துள்ளது.தமிழகத்தில், 2003ம் ஆண்டு, நவம்பர் மாதத்திற்கு முன்பு வரை, மதுபான விற்பனை, தனியாரின் ஏகபோக உரிமையாக இருந்தது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, இந்த ஏகபோக உரிமையை மாற்றி, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) மூலம் விற்பனை செய்... |